பங்களாதேஷ் ‘பிஜோய்’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

284 0

சிநேகபூர்வ சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் நாட்டின் ‘பிஜோய்’ கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கேற்ப இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இலங்கையின் பங்களாதேஷிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் சயிட் மக்சுமல் கலந்து கொண்டார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள குறித்த கப்பலின் அதிகாரிகள் நாட்டில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பலின் விஜயம் எதிர்வரும் 8ம் திகதி நிறைவடையவுள்ளது.

Leave a comment