மலையக விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்பாட்டுக்குழு- மனோ

Posted by - December 8, 2017

மலையக விவகாரங்கள் தொடர்பிலான செயற் பாட்டுக்குழுவொன்று பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் அடுத்த இரண்டுவாரங்களில் கூடுகின்றபோது மலையக  ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தும் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட தெரிவுக் குழுக்களின் அறிக்கைகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்க முயற்சி- திகாம்பரம்

Posted by - December 8, 2017

12 மாவட்டங்களில் காணி உறுதிகளை பெற்றுக் கொடுத்து தனி வீடுகளை  அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரி வித்த அமைச்சர் திகாம்பரம் பெருந்தோட்ட கம்பனிகள் நிலத்தை விடுவிப்பதற்கு குறைந்தளவினாலான ஒத்துழைப்பையே வழங்கிவருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் மலையகத்திற்கானஅபிவிருத்தியினைதுரிதபடுத்தும் வகையில் மலைநாட்டுபுதியகிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றேன். அதற்கு இந்த உயரிய சபையின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய

கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு(காணொளி)

Posted by - December 8, 2017

மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிமுனை கடற்படை முகாம், 2 ஏக்கர் இரண்டு பரப்பு நிலப்பரப்பு காணியில் அமைந்துள்ளமையால் அதற்கு சொந்தமான குடியிருப்பாளர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். காணி தொட்பாக வழக்கு விசாரனைகள் தொடர்ச்சியாக மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த

ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளது- எம்.எ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 8, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுரேஸ் அணியினை, பலமானதாக காட்டுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்கூட்டு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - December 8, 2017

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுகின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினை, பலமானதாக காட்டுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்கூட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக இன்று முற்றுகைப்போராட்டம்!

Posted by - December 8, 2017

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக இன்று(8) வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை கடற்றொழில் அமைப்புக்கள் முற்றுகைப்போராட்டமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன

யுத்தத்திற்கு காரணம் மொழிப் பிரச்சினையே! – விஜித ஹேரத்

Posted by - December 7, 2017

ஸ்ரீலங்காவில் இரு மொழிக் கொள்கை இருந்தும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ,

தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி!

Posted by - December 7, 2017

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் தகவல் உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல் படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி இன்றைய தினம் (07) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிரிட்ஜ் வியூ விடுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பங்காளி கட்சிகளுக்கு இடையில் உருவாகியிருக்கும் பிணக்குகளுக்கு இரு தினங்களில் தீர்வு!

Posted by - December 7, 2017

உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் உருவாகியிருக்கும் பிணக்குகள் தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.