கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு(காணொளி)

326 0

மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிமுனை கடற்படை முகாம், 2 ஏக்கர் இரண்டு பரப்பு நிலப்பரப்பு காணியில் அமைந்துள்ளமையால் அதற்கு சொந்தமான குடியிருப்பாளர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

காணி தொட்பாக வழக்கு விசாரனைகள் தொடர்ச்சியாக மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இணக்கப்பட்டின் அடிப்படையில் கடற்படை முகாம் நேற்று நில அளவீடு செய்யப்பட்டது.

நில அளவீடு இடம்பெற்ற பகுதியில், பாதீக்கப்பட்ட மக்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன், நில அளவைத் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகர்களும், பள்ளிமுனை பங்குத்தந்தை, மன்னார் பிரதேச செயலாளர் என்.பரமதாசன், கடற்படையினர் மற்றும் வழக்காளிகளும், பள்ளிமுனை மக்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

நில அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதா அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு நில அளவீடுகள் நிறைவடைந்துள்ளது.

மீண்டும் குறித்த பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரனை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 20 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment