ஸ்ரீலங்காவில் இரு மொழிக் கொள்கை இருந்தும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , இதையொரு தேசியப் பிரச்சினையாக கருதி உடனடியாக அதற்கான தீர்வைக் காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
30 வருடங்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பிரதான காரணமாக மொழி பிரச்சினையே காணப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 70 ஆண்டு ஆட்சிகளில் இரு அரசுகளுமே இந்த பிரச்சினை குறித்து காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இரு மொழிக் கொள்கை என்பதே தேசிய சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் அடிப்படை காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.