கவிரதன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் – யாழ்.பல்கலை மாணவர்கள் 

Posted by - November 8, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை…
மேலும்

வடகொரியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை 

Posted by - November 8, 2017
தென்கொரியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் மிக் ஜொன் உன்னை கடுமையாக எச்சரித்துள்ளார். தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று, தங்களை சோதிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீண்ட ஆசிய விஜயத்தை மேற்கொண்டுள்ள டொனால்ட் …
மேலும்

மோசடி குறித்து ஆராய விசேட மேல்நீதிமன்றம்

Posted by - November 8, 2017
நிதிமோசடி, ஊழல், அரசாங்க சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதன் பொருட்டு மூன்று பேர் கொண்ட நீதியரசர்களை உள்ளடக்கிய விசேட மேல்நீதிமன்றம்  ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை  அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மோசடியினால் அரசாங்கத்திற்கு 50 கோடி ரூபா வரையில் நட்டம்!

Posted by - November 8, 2017
ஜே.வி.பி இன்று லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளது. சிவில் பாதுகாப்பு படையணியின் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட  திட்டங்களின் மூலம் பெறப்பட்ட இலாபம், திறைச்சேரிக்கு கையளிக்கப்படாமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை கையளித்தன் பின்னர் கருத்து  தெரிவித்த, திகாமடுல்ல…
மேலும்

விகாரையில் தங்க வேலி திருட்டு 

Posted by - November 8, 2017
பிபிலை – மெதகம – 15ஆம் கட்டை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க வேலி அடையாளம் தெரியாத சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளது. 142  தங்க தூண்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி  5  லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் என்று…
மேலும்

தேங்காயின் விலையை பேண அறிவுறுத்தல் 

Posted by - November 8, 2017
சதொச  ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தேங்காயின் விலையை 65 ரூபாவாக பேணுவதற்கு, வாழ்க்கைச் செலவு குழு அறிவுறுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவுக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் வைத்து இந்த  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தையில்  தற்போது தேங்காயின் விலை அதிகரித்துச் செல்கின்ற நிலையிலேயே இந்த தீர்மானம்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 3 பேர் பாதிப்பு 

Posted by - November 8, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக  பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக உடுவில், சண்டிலிப்பாய், நல்லூர், சாவகச்சேரி, தெல்லிப்பழை,…
மேலும்

தங்கம் கடத்திய இலங்கையர் இந்தியாவில் கைது

Posted by - November 8, 2017
கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் கைதாகியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 118 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கொள்ளையர் ஒருவர் கைது 

Posted by - November 8, 2017
ஆயுத முனையில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்ட பிரபலமான குற்றவாளி ஒருவர் அவிசாவளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மீரிகம வங்கிக் கொள்ளை, கண்டியில் சிற்றூர்ந்து ஒன்றை கடத்தியதுடன் தங்க ஆபரணங்ளை அபகரித்தமை,…
மேலும்