நிலையவள்

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்

Posted by - February 13, 2017
செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம். இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும்…
மேலும்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

Posted by - February 13, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சிலரால் இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அது , தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து…
மேலும்

யாழ் கச்சேரி நல்லூரி வீதியில் விபத்து மூவர் படுகாயம்

Posted by - February 13, 2017
யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி 4 ம் சந்தி பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தும் கயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. இவ்விபத்தில் கயஸ் வாகனத்தில் பயணம் செய்த மூவர்…
மேலும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர்

Posted by - February 12, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஹசன் அலி செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27வது பிரதிநிதிகள் மாநாட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று…
மேலும்

அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது- ரணில்

Posted by - February 12, 2017
பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கின்றதா, இல்லையா என்பது தொடர்பிலேயே அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு…
மேலும்

பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

Posted by - February 12, 2017
வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பாதையில் இடம் தராமல் சென்றதாக…
மேலும்

அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது-ரஞ்சித் சொய்சா

Posted by - February 12, 2017
அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி கொலோன்ன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரத்துடன்…
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை-சுசில் பிரேமஜயந்த

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்திங்கு மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடுவலை பிரதேசத்தில்…
மேலும்

விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம்………..

Posted by - February 12, 2017
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம்…
மேலும்

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது ஜனவாக்கெடுப்பொன்றிற்கு செல்வதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முசாமில் இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்…
மேலும்