தாம்மால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை – அமைச்சர் ராஜித

329 0

தாம் வெளியிடும் கருத்துக்களால் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டபில்யு டி ஜே செனவிரத்ன, ராஜித சேனாரத்னவின் கருத்துக்கள் அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, தமது கருத்துக்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொண்டு அமைச்சர் பதவிகளை வகித்துவருகின்றவர்களுக்கே இதன் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படுகின்ற விடயங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் தைரியம் அமைச்சர்களுக்கு இருக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது குறிப்பிட்டார்.