இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்க்க அடிப்படைவாத சக்திகள் முயற்சி – ஜனாதிபதி

280 0

அனைத்து இனங்கள் மத்தியிலும் இருக்க வேண்டிய சமாதானம், ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு அடிப்படைவாத சக்திகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அடிப்படை வாதிகளின் இந்த முயற்சியை மக்கள் உண்மையான தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது இலங்கையின் சில பகுதிகளை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கை முயற்சியாக அமைந்துள்ளதாக கொண்டுசெல்லப்படும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.