ஜனாதிபதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

295 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட குப்பைக்கூல பிரச்சினை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று சூழலியலாளர் ஒருவரும் சூழல் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதியும் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானியின் மூலம் உள்ளுர் அதிகாரிகளுக்கு எந்த இடத்திலும் குப்பைகளை கொட்டும் அதிகாரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது அடிப்படை உரிமைமீறல் என்பதுடன் பாரிய நோய்களை ஏற்படுத்தும் என்று சூழலியலாளர் ரஞ்சித் சிசிர குமார மற்றும் சூழலுக்கான நீதியமைப்பின் சார்பில் பிரதிநிதி ஒருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.