தமிழ் மற்றும் சிங்கள சிறார்களுக்கு இடையில் ஐக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த போதும், சமாதானம் எட்டப்படவில்லை.
யுத்த வெற்றியானது, சமாதானத்தை ஏற்படுத்தி விடும் என்று கூற முடியாது.
யுத்தம் ஒன்று ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் அறியப்பட்டு, இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.