சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம்

257 0
கொடிகாமம் ஜே-322 கிராம சேவையாளரை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யக்கோரி சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான போராட்டத்தில் பிரதேச செயலர் தென்மராட்சி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீசாலை அல்லாரை பகுதியில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பு செய்த இளைஞர்களுக்கு எதிராக பிரதேச மக்கள் கிராம சேவையாளருக்கு வழங்கிய முறைப்பாடுக்கு அமைவாக விசாரிக்க சென்ற கிராம உத்தியோகத்தர் தாக்குதலுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சந்தேக நபர்களை கைது செய்யக்கோரி தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.