யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் விபத்து, இளம்குடும்பஸ்தர் ஒருவர் பலி

269 0

யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேலனை அராலி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேலனையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள்ளது.

இதன்போது டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்து சென்று கடலில் பாய்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய பிரபாகரன் என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் அவரது மனைவியான நிறெஞ்சனா காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

டிப்பர் வாகனத்தின் சாரதியை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இருவரும் திருமணம் முடித்து 6 நாட்கள் சென்ற நிலையிலேயே விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.