சமல் ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில்

245 0

ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பான அடிப்படை திட்டம் தெடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க, மகிந்த அமரவீர, சஜித் பிரேமதாச மற்றும் அரச அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை ஓரளவுக்கு வெற்றியளித்துள்ளதாக கூறப்படுகிறது.