விளக்கமறியலில் உள்ள நாமல் இன்று நீதிமன்றில் முன்னிலை

323 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டி வி ஷானக, பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, சம்பத் அதுகோரள மற்றும் தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் இணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி, வாக்கு மூலம் வழங்க, ஹம்பாந்தோட்டை காவல்துறை தலைமையகத்திற்கு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டனர்.

மத்தல வானூர்தி நிலையத்தை நீண்டகாலம் குத்தகை முறையில் இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சி, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் கடந்த 6ஆம் திகதி எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டனது.

அந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டு இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு நாடுதிரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ நேற்று சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சந்தித்துள்ளார்.

Leave a comment