கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை – இலங்கை கடற்படை 

287 0

இலங்கையை போதைப்பொருளற்ற நாடாக கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய பணியகத்துடன் இணைந்து கடற்படை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக, கடற்படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தை மீறியவகையில் போதைப்பெருட்களை தம்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த காலங்களில், 29.9 கிலோ ஹெரோயின், ஆயிரத்து 466.5 கிலோ கேரள கஞ்சா, 3 ஆயிரத்து 219.7 கிலோகிராம் கெபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 3 கிலோ ஹேஷிஸ், 118 பக்கெட் மதன மோதகம், 33 ஆயிரத்து 286 வலிநவாரண மாத்திரைகள், 8 ஆயிரத்து 660 சட்டவிரோத சிகரெட்ஸ், 128 கிலேகிராம் புகையிலை உற்பத்தி பொருட்கள் மற்றும் 182 லீட்டர் மதுபாணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய 193 பேர் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment