பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணில் தயார்

391 0

எந்த நேரத்திலும் பிரச்சினைக்குரிய பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாகி விடயங்களை தௌிவுபடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்ட பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்ற போது பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு அல்லது அரச அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவாகும் போது அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது போன்று ஆராய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் , எதிர்வரும் காலத்தில் அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதாகவும் பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment