மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் 

344 0

மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

பார்வையிழந்தவர்களுக்கென சில விசேட தொழிநுட்ப வசதிகளை ஏற்பாடு செய்வது, வாக்களிப்பு நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றாற்போல் அமைத்தல் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment