வடக்கு தொடரூந்து பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான தொடரூந்து சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
தொடரூந்து திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளமை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாவற்குழி தொடரூந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் தொடரூந்து நிலையம் வரையில் விசேட பேரூந்து சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.