இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, எதிர்காலத்தில் அதன் தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பலர் நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அது தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியானது சோனியா காந்தியிடமிருந்து அவரது மகனான ராகுல் காந்திக்கு வழங்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.