இலங்கை குழுவை சந்தித்தார் பாப்பரசர்

328 0

இலங்கையில் இருந்து வத்திக்கான் சென்ற குழுவொன்றை புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் சந்தித்து உரையாடியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு புனித பாப்பரசர் இலங்கைக்கு வருகை தருவதற்கான ஒழுங்கு ஏற்பாடுகளை இந்தக் குழுவினரே மேற்கொண்டிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் நல்லிணக்கத்திற்காக மக்கள் ஏங்கிக்கொண்டிருந்ததை தாம் அவதானித்ததாக பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சகல மதத்தவர்களும் ஒற்றுமையாகவும் கலாசாரத்துடனும் செயற்பட்டதை தாம் கண்கூடாக கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment