வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க தீர்மானம்

22782 0

வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்க அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருடன் உரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறவேண்டியுள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்தத பின்னர், இலங்கை நிறுவனங்கள், வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களின் சேவைகளை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment