வடக்கில் ஹர்த்தால்

10406 0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளில் நிர்வாக முடக்கல் போராட்டமும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

குறித்த பகுதிகளின் நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், கருப்புக் கொடிகள் ஏந்தப்பட்டு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட சேவைகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், மக்கள் நடமாட்டமின்றி வட பகுதி முழுமையாக முடங்கியது.

இதனால், அரச நிறுவனங்னகள் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டதுடன், மாணவர்களின் வரவின்றி சில பாடசலைகளும் மூடப்பட்டிருந்தன.

சில பாடசாலைகளுக்கு ஆசியர்கள் வருகைதராத காரணத்தால், மாணவர்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Leave a comment