புதிய அரசியல் கட்சி உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது

334 0

80026898_025259546-1புதிய அரசியல் கட்சி உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மாத்தறை நிகழ்வில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதிய கட்சி உருவாக்கினால் உண்மையை அம்பலப்படுத்துவதாகவும், பின்னர் வீதியில் நடமாட முடியாத நிலை உருவாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,அச்சுறுத்தல்கள் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கே வழிவகுக்கும். புதிய கட்சியை உருவாக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

அரசியல் கட்சியின் உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் தடுக்கமுடியாது. இது பொதுவான நடைமுறை. புதிய அரசியல் கடசியை உருவாக்கும் சுதந்திரம் நாட்டில் உள்ளது. அதுபற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.

மேலும் அச்சுறுத்தல்கள் எனது பயணத்தை நிறுத்தாது. புதிய அரசியல் கட்சிகளை உருவாக்குபவர்களுக்கு அது ஊக்கமளிப்பதாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.