தமிழக மீன்பிடி படகுகளை பழுது பார்த்து ஒப்படைத்த கடலோர காவல்படை

269 0
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 6 இந்திய மீன்பிடி படகுகள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.

பல்வேறு சமயங்களில் இலங்கை கடல் எல்லைப்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த இலங்கை ராணுவம் அவற்றை பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளது.

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக தமிழக மீனவர்களின் 42 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டன.

இந்தப் படகுககள் அனைத்தும் இலங்கை கடற்படையினரால் பழுதுபார்க்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செப்டம்பர் 30 ஆம் திகதியில் இருந்து இன்று வரை கைப்பற்றப்பட்ட 20 இந்திய மீன்பிடி படகுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை கடற்படையின் கண்காணிப்பு கப்பல்கலான “எடிதர II” வின் உதவியுடன் இந்த படகுகள் வடக்கு சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘அமேயா’ கப்பல்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Leave a comment