மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் ஆணைக்குழு

384 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்;டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பொதுமக்கள் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் தலைவராக களனி பல்கலைகழக பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவும் செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் சாரத கன்னங்கரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் 28 நாட்களுக்கு குறித்த ஆணைக்குழு செயற்படும்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் ஆரம்பம், வரலாறு, நிர்வாகம், அந்த மருத்துவ கல்லூரியினால் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன தொடர்பில் இது விசாரணை நடத்தி, எதிர்வரும் நொவம்பர் 19 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடும்.

இதற்காக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மாணவ அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களையும் பெற்று கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Leave a comment