தொடரூந்து கட்டுப்பாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

29912 0

தொடரூந்து இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நேற்று தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடரூந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தொடரூந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு பெற்றுகொடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.

அதன்பொருட்டு எட்டு பேர் கொண்ட குழுவொன்றை அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்ததாக தொடரூந்து தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வழமைப்போலவே தொடருந்து சேவைகள் நடைபெறாது என்று தொடருந்து கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்றிருந்த பல பணியாளர்கள் இன்னும் சேவைக்கு திரும்பாமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment