டெம்பிடியே சுகணானந்த தேரருக்கு 26ம் திகதி வரை விளக்கமறியல்

286 0

பல்கலைக்கழக மதகுருமார்கள் ஒன்றியத்தின் தலைவர் டெம்பிடியே சுகணானந்த தேரர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசசேகர ஆகியோரை இம்மாதம் 26ம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

2015ம் ஆண்டு மார்ச் மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பான வழக்கொன்றிற்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பு கொள்ளுபிட்டியவில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment