முன்னாள் போராளிகளின் நிலை குறித்து பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன்

308 0

WIGNESWARAN-1தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் நலன் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் இச்சந்திப்பின்போதே முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், அவர்களை விடுதலை செய்வதற்கு தவறியமை குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விச ஊசி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருந்தால், முன்னாள் போராளிகளை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.