யாழில் விபத்து, 24பேர் படுகாயம்

348 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-36மடுவிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்து நாளாவெளியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் 24பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும்இ குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து விட்டு இன்று அதிகாலை யாழ் நோக்கி சென்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் பூநகரி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பூநகரி காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.