அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாளை பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தின் முதல்வாசிப்பை மேற்கொள்ளவுள்ளார்.
பாதீட்டு முன்வைப்புக்கு முன்னதாக, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு இந்த சட்டமூலத்தின் ஊடாக கோரப்படும்.
அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.