மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டங்கள் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அச்சட்ட மூலங்கள் பெரும்பாலும் நிறைவேறும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதேபோன்று 2018 ஆம் ஆண்டுக்கான உத்தேச செலவுகள், வரவுகள் உள்ளிட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் ஊட கத்துறை மற்றும் நிதியமைச்சருமான மங்கள சமரவீரவினால் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சாதாரணமாக திங்கட்கிழமைகளில் பாராளுமன்றம் ஒன்றுகூடுவதில்லை. எனினும், மேற்கூறிய விடயங்களுக்காகவே விசேடமாக நாளை பாராளுமன்றம் ஒன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில் ஏற்படும் துண்டுவிழும் தொகையினை எவ்வாறு நிரப்புவது என்பது தொடர்பில் நவம் பர் 10 ஆம் திகதி நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்ட உரையில் தெளிவுபடுத்தப்படும்.
நிதியமைச்சரினால் பாராளுமன்றில் வரவு, செலவுத்திட்ட உரை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஒதுக்கீட்டு சட்டமூலம் பாரா ளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண் டும்.
அதனடிப்படையிலேயே நாளை 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.