காவல்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

301 0

Jayalalithaa_2160611fமுதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பில் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை சட்டப்பேரவையில் இன்று இடம்பெறுகிறது.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்கள் தர்ணா போன்றவற்றில் ஈடுபடாமல் தடுக்க பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக திமுக உறுப்பினர்கள் 79 பேர் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் 19ஆம் திகதி போட்டி சட்டசபைக் கூட்டம் நடத்தினர்.
தலைமைச் செயலகத்துக்குள் அனுமதியின்றி கூடியதாகவும், உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.