தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட 3 பேர் கைது

617 0

முச்சக்கர வண்டி சாரதிகளை ஏமாற்றி அவர்களிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இறக்குவானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பேரும் வாடகைக்காக அழைத்து செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போதை மருந்து கலந்த பானத்தை வழங்கிஇ அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளமை ஆரம்ப விசாரரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a comment