மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும்

3529 0

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மத்திய சப்ரகமுகவ ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

Leave a comment