துருக்கி தற்கொலை தாக்குதல் – 51 பேர் பலி

320 0

blastதுருக்கியின் கசியன்டெப் நகரத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் பலியானவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வடைந்துள்ளது.

சம்பவத்தில் 69 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருமண வீடொன்றை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை பதிண்ம வயதுடைய ஒருவரே  மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகளே மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.