ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மன் பயணம்

246 0

ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனுக்கு பயணிக்கவுள்ளார்.

ஜேர்மனியின் தலை நகர் பெர்லின் நகரிற்கு மேற்கொள்ளும் இந்தப் பயணத்தை தொடர்ந்து பிரதமர் எதிர்வரும் 09ம் திகதி பின்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்லாந்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பை மேலும் உறுதி செய்து கொள்ளல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில் துறைகளில் புதிய தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளல் போன்ற நோக்கங்களுடன் பிரதமர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உட்பட இன்னும் சில அதிகாரிகள் பிரதமரின் பின்லாந்திற்கான விஜயத்தின் போது இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பயணத்தின் போது பின்லாந்தின் தலைநகரான ஹெல்சின்கியில் பிரதமர் தலைமையிலான இலங்கை தூதுக் குழுவுக்கும் அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment