சிறீலங்காவில் பாதுகாப்புக் கருத்தரங்கு!

289 0

SL-Army-logo_CI.gifஆண்டுதோறும் சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்படும் பாதுகாப்புக் கருத்தரங்கு, செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மென்சக்தி மற்றும் பூகோள விவகாரங்களில் அதன் செல்வாக்கு என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டு சக்தி, மென்சக்தி கோட்பாடு மற்றும் அவற்றின் தாக்கங்கள், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஆயுதப் படைகள், பூகோள விவகாரங்களில் மென்சக்தியின் செல்வாக்கு உள்ளிட்ட விடையங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.