மன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நானாட்டானில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.வசீகரன், ஐந்து மாவட்டங்களின் உதவி பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பா.டெனிஸ்வரன் விவசாய, கால்நடை உற்பத்திகள் மூலமே தற்பொழுது அதிக இலாபம் ஈட்டப்படுவதாகவும் இத்துவே சிறந்த வாழ்வாதாரமாக காணப்படுவதாகவும் தம்மால் வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளுக்கு தாம் இவ்வாறன திட்டங்களையே முன்னிலைப்படுத்துவதகவும் தெரிவித்ததோடு அச்செயற்திட்டங்களுக்கு தமக்கு உதவியாக இருக்கும் கால்நடை திணைக்கள அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது மத பிரிவினைவாதம் எம்மக்கள் மத்தியில் ஊடுருவுவதாகவும் இதனால் எமது இவ்வளவு வருடகால தியாகங்களும் பயனற்றதாகிவிடும் எனவும் இக்கொடிய பிரிவினைவாதத்தினை மக்கள் களையவேண்டும் என்றும் எமது நடவடிக்கைகள் மூலம் அயலவர் மற்றும் சகோதர மதத்தவர்கள் மனம் நோகாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கால்நடை பண்ணையாளர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கால்நடை வைத்திய முகாமும் நடைபெற்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

