மின்சாரம் தாக்கி வெளிநாட்டவர் ஒருவர் பலி!

225 0
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பனாமா நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த பனாமா நாட்டை சேர்ந்த கப்பலில் பணிபுரியும் அதிகாரியொருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுக கடற்படையினர் மின்சாரம் தாக்கிய வெளிநாட்டவரை ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதித்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னர் அவர் மரணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment