பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை மு.ப.11.00 மணி முதல் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி வரையிலான 16 மணிநேர நீர்வெட்டு நீர்கொழும்பு மாநகர சபைப்பகுதியில் அமுல் செய்யப்படவுள்ளது.
இதற்கமைய தூவபிடிபன பகுதி, கட்டுநாயக்க விமானப் படைத்தளம், கட்டுநாயக்க ஏற்றுமதி முதலீட்டு வலயம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.