நாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்குமாறு மஹாநாயக்க தேரர்களால் விஸ்ணு பெருமானுக்கு அனுப்பபட்ட தூதுடனான வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடைய உள்ளது.
தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைபபின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த வாகன பேரணியானது நேற்ற முன்தினம் தெய்வேந்திரமுனை விஸ்ணு ஆலயத்தில் ஆரம்பமானது.
இந்த நிலையில், நாரஹேண்பிட்ட அபயராம விகாரைக்கு இன்று பிற்பகல் செல்லும் இந்த வாகன பேரணி, மாலை அளவில் களனி விகாரையில் உள்ள விபீஸ்ணன் ஆலயத்துக்குச் சென்று நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.