பாடசாலை மாணவர்கள் 3 பேர் கைது!

9276 41
மிஹின்தலையில் உள்ள பாடசாலை ஒன்றின் கணினி அறையில் இருந்து கணனி ஒன்று மற்றும் கணனி பாகங்களை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினி அறையின் கதவை உடைத்து நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பின்னர் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணனி மற்றும் கணினி பாகங்கள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

Leave a comment