கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அம்பாறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
டப்ளியூ.டி. வீரசிங்க, சந்திரா தெவரப்பெரும, டி.எம். ஜயசேன ஆகிய மாகாண சபை உறுப்பினர்களே பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் அதில் இணைந்துக்கொண்டுள்ளனர்.