முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையை அணிந்து இளைஞன்

2927 0

முஸ்லிம் பெண்கள் உடலை முழு­மை­யாக மூடு­வ­தற்­காக அணியும் புர்காவை அணிந்து பஸ்ஸில் அமர்ந்­தி­ருந்த இளைஞனொருவனை பதுளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் தெமோ­த­ரையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இளைஞர் புர்காவை அணிந்த பதுளை பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து பசறை செல்லும் இ.போ.ச. பஸ்ஸில் அமர்ந்­தி­ருந்த போது இவரில் சந்­தேகம் கொண்ட பய­ணி­களில் ஒருவர் ரோந்து சேவையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸா­ருக்கு தெரி­விக்­கவே பொலிஸார் இவரை சோதனையிட்டுள்ளனர்.

மோசடி ஒன்றில் ஈடு­படும் பொருட்டே சந்தேகநபர் இவ்­வாறு நடந்து கொண்­டி­ருக்­க­லா­மென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்­பான விசா­ர­ணை­களை பதுளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment