முஸ்லிம் பெண்கள் உடலை முழுமையாக மூடுவதற்காக அணியும் புர்காவை அணிந்து பஸ்ஸில் அமர்ந்திருந்த இளைஞனொருவனை பதுளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் தெமோதரையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இளைஞர் புர்காவை அணிந்த பதுளை பஸ் நிலையத்திலிருந்து பசறை செல்லும் இ.போ.ச. பஸ்ஸில் அமர்ந்திருந்த போது இவரில் சந்தேகம் கொண்ட பயணிகளில் ஒருவர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு தெரிவிக்கவே பொலிஸார் இவரை சோதனையிட்டுள்ளனர்.
மோசடி ஒன்றில் ஈடுபடும் பொருட்டே சந்தேகநபர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.