கல்கிஸ்ஸை பிரதேசத்தில் தங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி, நீதிமன்ற நடவடிக்கை

275 0

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் தங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி, நீதிமன்ற நடவடிக்கை

கள் நிறைவடையும் வரையில் அவர்களை பூசா முகாமிலேயே தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அகதிகளை வெளியேற்றக் கோரி, பௌத்த பிக்குகள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அவர்கள் தங்கி இருந்த வீட்டையும் முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து குறித்த அகதிகள் காவற்துறையினரால் மீட்கப்பட்டு, பூசா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் நேற்று விளக்கமளித்திருப்பதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment