தியாகி திலீபனுடைய 30வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சி அறிவகத்திலும்(காணொளி)

5214 0

இந்திய ஏகாதிபத்திய அரசிற்;கெதிராக அகிம்சை ரீதியில் பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்;த தியாகி திலீபனுடைய 30ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கிளிநொச்சியில்; அமைந்துள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு அறிவகம் மாநாட்டு மண்;டபத்தில் இளைஞர் அணியின் தலைவர் சு.ரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா ஆகியோரும் கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும்; கலந்து கொண்டு தமது இதயபூர்;வ அஞ்சலிகளைச் செலுத்தினர்.

Leave a comment