யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் (காணொளி)

1144 0

தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அனுஸ்டிக்கப்பட்டது.

நல்லூர் வடக்கு வீதியில் அமைத்துள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் சுடர் ஏற்றி, மாலையிட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ராகளாகிய எஸ்.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உட்பட பொதுமக்கள் பலர் 30 ஆம் ஆண்டு இறுதி நாள் நிகழ்வில் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி திலீபன் உயிர்தியாகம் செய்த 10.58 மணிக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

Leave a comment