காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு; (காணொளி)

419 0

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நடாத்தப்பட்ட தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இடம்பெறும் மண்டபத்தில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதன்போது தியாதி திலீபனின் திருவுருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.

திலீபன் அகிம்சையாக போராடியதைப்போல நாமும் எமது பிள்ளைகளை மீட்டு தருமாறு கோரி அகிம்சை வழியில் போராடி வருகின்றோம் என இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து வெளியிட்டனர்.

Leave a comment