யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

434 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலாளர், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment