322 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 212 இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு

392 0

இந்த வருடத்தில் 322 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 212 இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் 95 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரட்சி காலநிலை காரணமாக ஏஞ்சிய பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டன.

இதேவேளை, இந்த வருடத்தின் அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வருட இறுதிக்குள் செலவிடுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்த்தன மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பின் அவ்வாறான செயற்திட்டங்கள் தொடர்பில் அறிவித்து அந்த பணத்தை பிறிதொரு செயற்திட்டத்துக்காக பயன்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment